×

திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

குலசேகரம்: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை கிடைத்தது அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் பலரையும் மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. கடந்த 22ம் தேதி சனிக்கிழமை, மறுநாள் ஞாயிற்றுக்கிழமை, திங்கள் உள்ளூர் விடுமுறை, ேநற்று கிறிஸ்துமஸ் பண்டிகை என தொடர் விடுமுறை கிடைத்தது. இதனால் கன்னியாகுமரி உட்பட குமரி சுற்றுலா தலங்களில் கடந்த சில நாட்களாக மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

அதுபோல திற்பரப்பு அருவியிலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. நேற்று அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். இன்றும் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை என்பதால் அதிகாலை முதலே கூட்டம் களைகட்டியது. அருவியில் குளித்த பலரும் அருகில் உள்ள மகாதேவர் கோயிலுக்கும் சென்று வழிபட்டு சென்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tourist arrivals ,Arpita , Advent Falls, Tourists, Visit
× RELATED இ-பாஸ் நடைமுறையால் சுற்றுலாப்பயணிகள்...